Friday, December 18, 2009

WHY I AM NOT A MUSLIM ... 2

*

Chapter I

THE RUSHDIE AFFAIR

*
14 பிப். 1989-க்கு முன்னால் ..

1280-ல் பாக்தாத்தில் ஒரு யூத மருத்துவரும் தத்துவஞானியுமான Ibn Kammuna என்பவர் எழுதிய Examinations of the Three Faiths என்ற நூலில் மூன்று யூத மதங்களைப் பற்றி எழுதியவர் முகமது நபியை எவ்வாறாக ஒரு தூதராகக் கொள்வது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக அவரை தீயில் எரிக்கப்பட வேண்டும் என்று எமிர் ஒரு தீர்ப்பளிக்க, ஆனால் அவர் எப்படியோ அந்த தண்டனையிலிருந்து தப்பி விட்டார். (4)

இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை நாம் நிறைய காண முடியும்.

1961-63-ல் இந்திய தூதுவராக இருந்த அமெரிக்கர் John Kenneth Galbraith தன் செல்ல பூனைக்கு 'அஹமது' என்று பெயரிட்டு வைத்திருந்தார். அதுவும் முகமதின் மற்றொரு பெயர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வந்த Deccan Herald 'முகமது என்ற முட்டாள்' என்று ஒரு சிறுகதை எழுத, அதனால் அந்த தினசரி அலுவலகம் எரிக்கப் பட்டது. 'சமீபத்தில்' ஷார்ஜாவில் 'The Ants That Eat Corpses' என்ற மலையாள நாடகம் முகமது பற்றிய வசனம் வந்ததால் அதை நடத்தியவர்களுக்குச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது.

Daniel Pipes என்பவர் எழுதிய The Rushdie Affair என்ற நூலில் இதுபோன்ற பல நிகழ்வுகள் - இஸ்லாமிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் நேர்ந்தவைகள் - கொடுக்கப்பட்டுள்ளன.(4)

*

1937-ல் எழுதப்பட்டு, 1974-ல் மட்டுமே பதிப்பிக்கப்பட்ட Dashti என்பவரின் 'இருபத்தி மூன்று ஆண்டுகள்' ( நபி தூதுவராகச் செயல்பட்ட 23 ஆண்டுகள் ) என்ற நூல் 1980-1986 வரையிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்ட அந்த நூலில் -

*
பகுத்தாயும் அறிவினை ஆதரித்து, கண்மூடித்தனமான நம்பிக்கைகளைக் கண்டிக்கிறார். அந்த வகை நம்பிக்கைகள் அறிவு மிக்கவர்களின் மூளையின் கூர்மையைக் கூட மழுக்கடிக்கின்றன.

*
குரானின் மொழிநடை பற்றிக் கூறுகையில், குரானின் வாசகங்களின் அமைப்பும் நடையழகும் மிக உயர்ந்தவை அல்ல; இதைப் போன்றோ இதைவிட மேலாகவோ இன்னொரு கடவுள் நம்பிக்கையாளர்களால் எழுத முடியக்கூடியதே. (5)

*
குரானில் நூற்றுக்கும் அதிகமாகவே தவறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

* குரானில் புதிதாக ஏதும், அதுவரை சொல்லப்படாதவைகள் ஏதும் சொல்லப்படவில்லை.

*
இஸ்லாமில் சொல்லப்படும் கடமைகளும், சமயச் சார்புள்ளவைகளும் ஏற்கெனவே இருந்துவந்த பாகனிய அராபிய, யூத வழக்கங்களே.

*
நபியின் வழித்தோன்றல்களுக்கு கொலை செய்வதைக் கூட இஸ்லாமியக் கடமையாகக் கூறப்பட்டுள்ளது. (5)

*
Pipes என்பவர் தன் நூலில் சொல்வது: முமார் அல் கடாபி என்ற லிபியன் தலைவர்
வெளிப்படையாக குரானைப் பற்றியும், நபியையும் பற்றி் சொன்னவைகள் இதுவ்ரை சொல்லப்பட்டவைகளை விடவும் மிகவும் மோசமான கடவுள் தூஷணமாக இருக்கும். (7)

*
Farah Fada அவரது 'NO to Sharia' என்ற தன் நூலில்: சமயங்களும் அரசியலும் தனித் தனியே கையாளப்பட வேண்டும்; ஏனெனில் இஸ்லாமால் ஒரு மதச்சார்பற்ற, தற்காலத்திற்கேற்ற அரசாங்கத்தை நடத்த முடியாது. (8)

*
பிப். 14, 1989-க்குப் பிறகு ...

ஈரானிய கோமேனி கூறியவைகள்: "புகழ் பெற்ற இஸ்லாமிய அகராதி ஜிகாட் என்பதை 'முகமதின் கொள்கைகளை நம்பாதவர்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஒரு யுத்தம். குரானில் சொல்லப்பட்டது போல் அது ஒரு தெய்வீகக் கடமை; இஸ்லாம் பரவுவதற்கும், இஸ்லாமியரிடம் உள்ள தீமைகளை வேரறுக்கவும் பயன்படும்'.(12)

*
இப்பகுதியில் ஆசிரியர் ரஷ்டிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் பேசிய பலரின் கூற்றுக்களைத் தொகுத்தளிக்கிறார். இறுதிப் பத்தியில்: படைப்பைப் பொறுத்தவரையில் விவிலியமும் குரானும் ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டதைப் பற்றிச் சொல்கின்றன. ஆனாலும் பல கிறித்துவர்கள் அறிவியல் சொல்லும் பரிணாமக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தங்கள் நம்பிக்கைகளில் ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் பெற்றோர்கள் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். விவிலியத்தில் சொல்வது போல் நம் 'முதல் பெற்றோர்கள்' என்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அந்த 'முதல் காலடியைக்' கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. (33)



*


*

359. இப்படி ஒருவர் ...

எனக்கு வந்த மெயில் ஒன்று. என் ஆச்சரியத்தை, மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.


-----------------------------


Came across nice article.

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது

------------------------------------------------------------------------------

?ui=2&view=att&th=1256765dae601cbc&attid=0.1&disp=attd&realattid=ii_1256765dae601cbc&zw

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!


We are proud of you!

Sunday, December 13, 2009

358. நீயா .. நானா ..?

*

வழக்கமாக ஒரு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 – 10 என்பதற்குப் பதிலாக 9 – 10.45 என்று நீண்டாலும் தொடர்ந்து பார்க்க என்னை இறுத்தியது. மிக நன்றாக இருந்த ஒரு நிகழ்ச்சி.

கல்விக் கடனுக்கு அலைந்த மாணவர்கள் ஒரு புறம்; கல்விக்கடன் தரும் வங்கி அதிகாரிகள் என்று ஒரு புறம். நான் முதல் இருபது நிமிடங்கள் பார்க்கவில்லை. அந்த நேரத்தில்தான் மாணவர்கள் தங்கள் சோகங்களைக் கொட்டித் தீர்த்திருப்பார்கள் போலும். மாணவர்கள் என்ன பேசினார்களோ தெரியவில்லை; ஆனால் நான் பார்க்கும்போது பேசிய வங்கி அதிகாரிகள் யாரும் உருப்படியாகப் பேசியதாகத் தெரியவில்லை.

மிக ஏழைக்குடும்பத்து மாணவி தன் பொறியியல் படிப்புக்குக் கடன் கிடைக்காத சோகத்தைச் சொல்லும்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன். தனக்கு கடன் கிடைக்காததைப் பற்றிப் பேசும்போது ஒரு வங்கி அதிகாரி சட்டென்று, நாளைக்கே இந்த பெண்ணுக்குக் கடன் தருகிறேன் என்று சொன்ன பிறகு, அந்தக் குழந்தை அழுது பேசியது மனதைத் தொட்டது. நிகழ்ச்சி முடிவில் கோபிநாத் அந்த வங்கி அதிகாரிக்கு ஒரு தொலைப்பெட்டி பரிசளித்த போது நிச்சயமாக அவர் அந்த தொலைப்பெட்டியைக்கூட அந்த பெண்ணுக்கே கொடுத்து விடுவார் என்று நினைத்தேன். மனுஷன் அதையும் தாண்டி விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியை தன் வங்கி மூலம் ஏதாவது ஒரு அநாதைக் குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பிற்கு கொடுக்கப் போவதாகக் கூறினார். நன்றாக இருந்தது. அந்த அதிகாரிக்கு என் வணக்கங்கள்.

அதேபோல் பாலுமகேந்திரா என்ற மாணவனுக்கும் 4 லட்ச ரூபாய் கடன் தொகையை அனுமதித்தார் இன்னொரு வங்கி அதிகார். ஒரு break முடிந்து வந்ததும் கோபிநாத் அந்த மாணவன் ஏதோ சொல்ல விரும்புவதாகக் கூறி அழைத்தார். அந்த மாணவன் தான் கடனுக்காக அலைந்து கிடைக்காமல் போனதால் இவ்வருட படிப்பு படிக்க முடியாது போயிற்று. அந்தக் கடனை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு ஏழை மாணவனுக்கு அவர் பரிந்துரைக்க வங்கி அதிகாரி அந்தப் புதிய மாணவனுக்குக் கடனைத் தர சம்மதித்தார். தனக்கு வந்த கடனை அடுத்த மாணவனுக்கு – அந்த மாணவனை இந்த நிகழ்ச்சியில்தான் முதலில் சந்தித்துள்ளான்; break சமயத்தில் வேறு எந்த ஏழை மாணவனுக்கு உதவி தேவை என்று கேட்டறிந்து, அதன்பின் தனக்குக் கிடைத்ததை அடுத்த மாணவனுக்குத் தந்த அந்த மாணவன் … simply great!
He humbled me.


முக்கிய விருந்தாளியாக வந்ததில் மாணவர்கள் தரப்பில் பேசிய ஒரு வழக்குரைஞர் பேசியது கொஞ்சமேயாயினும் மிகத் தெளிவாக ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவர் கருத்துக்கு வங்கி அதிகாரிகளோ மற்ற விருந்தினரோ பதில் கொடுக்க முடியாதபடி தன் கருத்தைத் தந்த அந்தப் பெண்மணியும் பாராட்டப் பட வேண்டியவரே.

கோபிநாத் நடத்தும் இந்த நிகழ்ச்சிகளில் பல எனக்குப் பிடிக்கும். இன்று கோபிநாத் was on the top! Hats off to him. Emotional ஆன விஷயங்களை மிக ஆழமாக மனதில் பதியும்படி பேசி இந்த நிகழ்ச்சியை மிக அழகாகக் கையாண்டார். நிச்சயமாக இதை வங்கி அதிகாரிகள் பார்த்திருந்தால் சென்ற சில மாதங்களில் அவர்கள் மறுத்த சில கல்விக் கடன் பத்திரங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

வாழ்க .. வளர்க .. நீயா .. நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

விஜய் டிவிக்கும் என் வாழ்த்துக்கள்.



*

*

Wednesday, December 09, 2009

357. WHY I AM NOT A MUSLIM ... 1

*





*

WHY I AM NOT A MUSLIM

நூலாசிரியர்: IBN WARRAQ
PROMETHEUS BOOKS
59. John Glenn Drive
Amherst,
New York

1995




*
R. JOSEPH HOFFMANN
WESTMINISTER COLLEGE, OXFORD
என்பவர் எழுதிய முன்னுரையிலிருந்து ....



*

இந்த நூல் ஒரு நீண்ட பயணம் பற்றியது; அந்தப் பயணம், இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து அதன் நம்பிக்கைகளில் ஊறி, அதன்பின் ஒரு சிலரால் 'வெள்ளைக்காரத்தனம்' என்று சொல்லப்படும் மேற்கத்திய 'திறந்த மதம்' என்ற அமைப்பில் வாழ்ந்து, அந்த வாழ்க்கையால் பிறந்த ஐயங்களின் ஊடே பயணித்து, இறுதியில் மத மறுப்பு என்னும் புள்ளியைப் பெற்ற பயணம்.

*
இது போன்ற பயணங்கள் எல்லாமே மிகவும் தனிமைப் படுத்தப்பட்ட பயணங்களே!

*
இந்த 'மதப் பயணங்களில்' செல்பவர்கள் தாங்கள் சொல்வதையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு தன்னைச் செவி மடுப்பதாகவும், புரிந்து கொள்வதாகவும் நம்புகிறார்கள்.



*
DEDICATION

மதப் பாசிஸத்தையும் மீறி
நான் பெற்ற
என் தாய், மனைவி, சகோதரி, என் மகள்கள்
அவர்களுக்காக ...

*

ஆசிரியரின்
முன்னுரையிலிருந்து ...


*

இன்று தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகச் சொல்லிக்கொள்ளும் நாட்டில் நான் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்து வளர்ந்தேன்.

*
என் தாய்நாட்டின் மொழியைக் கற்றுக் கொள்வதற்கு முன்பே நான் அராபிய மொழியில் எதுவும் புரிந்து கொள்ளாமலேயே குரானை வாசிக்கக் கற்றுக் கொண்டேன். ஆயிரக்கணக்கான முஸ்லீம் குழந்தைகளுக்கு உரிய விஷயம்தான் இது.

*

சிந்திக்க ஆரம்பித்த போது மதங்கள் என் மீது ஏற்றி வைத்தவைகளை நான் ஒதுக்க ஆரம்பித்தேன். இப்போது நான் என்னைப் பற்றி நினப்பதெல்லாம், நான் ஒரு சமயத் தொடர்பில்லாத, மனித நேயம் மட்டும் கொண்டவன். எல்லா மதங்களுமே மனம் பிறழ்ந்தவர்களின் கனவுகள்; ஆய்வில் புறந்தள்ளப்பட வேண்டிய, எங்கும் எளிதாகப் பரவும் கனவுகள்தான் அவை.


*

நான் இதுவரை எந்த ஒரு நூலும் எழுதியதில்லை. ஆனால் ஷல்மான் ருஷ்டி விவகாரத்திற்குப் பிறகுதான் இந்த நூலை எழுத வேண்டும் என்ற முயற்சி எனது மனத்தில் தோன்றியது. 1930-களில் பெரும்போருக்குப் பிறகு நாஸிஸம்,கம்யூனிசம், சுதந்திரப் போராட்டங்கள், சனநாயக அமைப்புகள், காலனிய எதிர்ப்பு போன்ற பல மாற்றங்களில் தாங்கள் எவ்வாறு பங்கெடுத்திருப்போம் என்ற நிலைப்பாடு என் வயதினருக்கு வழக்கமாக எழுவதுண்டு. இதுபோன்ற பெரிய நிலைப்பாடுகளில் நாம் எந்தப் பக்கம் இருந்திருப்போம் என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு. சல்மான் ருஷ்டி விஷயமும், இஸ்லாம் பரவும் விஷயமும் எனக்கு அத்தகைய ஒரு நிலைப்பாடை நான் எடுக்க வேண்டும் என்ற சூழலைத் தந்தன. அந்தச் சூழலில் விளைந்ததுதான் இந்த நூல். அந்த விஷய்ங்களில் என் நிலைப்பாட்டை சொல்வதே இந்த நூல்தான்.

1930-களின் நிலைப்பாடை எடுக்க முடியாதவர்கள் இன்று இரு விஷயங்களில் - ஒன்று சல்மான் ருஷ்டி பிரச்சனை, இன்னொன்று போர் மேகங்கள் குவிந்து கிடைக்கும் அல்ஜீரியா, சூடான், ஈரான், செளதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அல்லலுறும் இஸ்லாமியர், இஸ்லாமியப் பெண்கள், இஸ்லாமிய அறிஞர்கள், எழுத்தாளர்கள், சாதாரண மக்கள் - இந்த இரு விஷயங்களில் தத்தம் முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளனர். இந்த நூல் எனது அத்தகைய முயற்சியின் ஒரு போர்க்கால நடவடிக்கையே. இப்படியெல்லாம் ஒரு நூலை எழுத வேண்டுமா என்ற நினைப்பு எனக்கு வரும்போதெல்லாம் கடவுளின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் அல்ஜீரியாவிலும், ஈரானிலும், துருக்கியிலும், சூடானிலும் நடக்கும் கொலைவெறிகள் என்னை இந்த நூலை விரைந்து முடிக்கத் தூண்டின.

*

இஸ்லாமுக்கு தோழர்களாக உருவெடுத்த மேற்கத்திய பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், கம்யூனிசத்திலிருந்து மனம் மாறியோர் என்று பலரும் கொஞ்சமும் பொருந்தாத, மேட்டிமைத்தனமான, சினம் தூண்ட வைக்கும் விதமாக இஸ்லாமுக்குப் பரிந்து பேச ஆரம்பித்தார்கள். ஆனால் மிக தைரியமான சில இஸ்லாமியர்கள் தொடர்ந்து சல்மானை ஆதரித்து வந்தனர். எகிப்தின் Rose al - Yousef என்ற பத்திரிகை 1994 ஜனவரி மாதம் Satanic Verses-லிருந்து சில பகுதிகளை தங்கள் பக்கங்களில் எழுதினார்கள்.

இந்த நூலுமே இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளைத் தீவிரமாக ஆராய்ந்து, சில நியாயமான எண்ணங்களை எழுப்பி, முழு நம்பிக்கையோடு இருக்கும் இஸ்லாமியக் கொள்கைகள் மீது ஒரு துளி ஐயத்தை எழுப்புவதுமாகும். இந்த நோக்கிற்காக குற்றம் சாட்டப்பட உள்ள நிலையில், நான் ஒரு மேற்கோளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

John Stuart Mill: 'நாம் மூடி மறைக்க விரும்பும் ஒரு செய்தி தவறானது என்று முன்கூட்டியே நாம் முடிவு செய்ய முடியாது; அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அப்படி மூடி மறைப்பது தவறானதே'.









---------
ACKNOWLEDGMENTS அதிலிருந்து சில பகுதிகள்

*
நான் ஒன்றும் பெரிய அறிஞனோ, ஆராய்ச்சியாளனோ இல்லை. நான் எழுதுவதெல்லாமே என் சொந்த சரக்கு என்றும் சொல்லப்போவதில்லை. நான் கையாண்டிருப்பது எல்லாமே மெத்த படித்த அறிஞர்களின் கருத்துக்களே. அவைகளை வாசித்து, எல்லோருக்கும் புரியும்படிக்கு எளிதாக்கி இங்கே அளித்துள்ளேன். ஒன்று முழுவதுமாக அவர்களது எழுத்துக்களைத் தந்திருப்பேன்; இல்லை, அதை அவர்களது பெயர்களோடு என்னால் முடிந்தவாறு எளிதாக்கித் தந்திருப்பேன். நிச்சயமாக இந்த நூல் என் படைப்பல்ல.’முழுவதும் காப்பியடிக்கப்பட்ட ஒரு நூல்’ என்று யாரும் இந்நூலைப் பற்றிச் சொன்னால், அதை முழு மனதோடு ஒப்புக்கொள்வேன். அதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை.
*

Encyclopedia of Islam-ன் முதலிரு பதிப்புகளைப் பயன்படுத்தியுள்ளேன். அதிலும் முதல் பதிப்பே சிறிது ‘திறந்த புத்தகமாக’ இருப்பதாகக் கருதியதால் அதையே மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளேன். ஏனெனில், இரண்டாவது பதிப்பில் அரசியல், சமயக் குறுக்கீடுகளால் கருத்துக்களும், சொற்களும் தங்கள் முனைப்பை அதிகம் இழந்துவிட்டிருக்கின்றன. The Dictionary of Islam – இதிலும் முதலாம் பதிப்பே மிக்க பயனுள்ளதாயிருந்தது – அதே காரணங்களுக்காக!


முன்னுரையிலிருந்து
சில பகுதி
கள்

*
இந்த நூலை வாசிக்கும்போது சிலவற்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கோட்பாட்டிற்கும், அதன் செயல் முறைக்கும் உள்ள வேற்றுமைகள்; இஸ்லாமியர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்; அவர்கள் எதை நம்பி எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லாமல் அவர்கள் நம்பிக்கைகளும் அதைக் கடைப்பிடிப்பதில் உள்ள வேற்றுமைகளும் – இந்த வேறுபாடுகள் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.

*
நாம் இஸ்லாம் 1, இஸ்லாம் 2, இஸ்லாம் 3 என்ற மூன்று வித இஸ்லாமைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் 1 -- நபியால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வேதம்.
இஸ்லாம் 2 -- ஹடித், ஷாரியத், இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் இவைகளின்படி மதாச்சாரியார்களால் புரிந்துகொள்ளப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட, விளக்கப்பட்ட இஸ்லாம்.
இஸ்லாம் 3 -- இஸ்லாமிய நாகரீகம்; அதாவது இன்று முஸ்லீமகளால் உண்மையில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாம்.

*
இந்த நூலில் இஸ்லாம் 1 & 2 மூலம் சொல்லப்படுவதற்குத் தொடர்பில்லாமலேயே இஸ்லாம் 3 அல்லது இஸ்லாமிய நாகரீகம் உயர வளர்ந்து நிலைபெற்றது என்பது தெளிவாகும்.இஸ்லாமிய தத்துவார்த்தங்கள், இஸ்லாமிய அறிவியல், இஸ்லாமிய இலக்கியப் படைப்புகள், இஸ்லாமிய கலை நுட்பங்கள் - இவை எல்லாமே இஸ்லாம் 1 & 2-களின் அடிப்படை இல்லாமலேயே வளர்ந்து செழித்தன. இஸ்லாமிய இலக்கியப் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்களேன். நபி தன் முதல் கால கட்டத்தில் இத்தகைய பாடல்களுக்கு எதிரானவராக இருந்தார். சுரா 26:224-ல் 'மனம்போனபடி இருப்பவர்கள் மட்டுமே இத்தகைய பாடல்களை நோக்கிச் செல்பவர்களாக இருப்பார்கள்' என்கிறார். மிஷ்கத் என்ற பழக்க வழக்கங்கள் என்ற பகுதியில் நபி, 'வயிறு முட்ட இப்படிப்பட்ட பாடல்களோடு இருப்பதைவிட சீழ்பிடித்த வயிற்றோடு இருப்பது சிறந்தது' என்கிறார். இத்தகையக் கருத்துக்களோடு உள்ள இஸ்லாம் 1 & 2 - இவைகளை பின்பற்றுவது மட்டுமே இருந்திருந்தால் அபு நுவாஸ் போன்று ஒயினைப் பாராட்டும் இலக்கியங்களையோ, மற்றும் அதிகமாக உள்ள ஒயினைப் புகழும் அராபிய இலக்கியங்களைக் காண முடிந்திருக்காது.
*

இஸ்லாமிய கலைகளைப் பொறுத்தவரை இஸ்லாமிய அருட்பொருள் சொல்லகராதியில் (மி்ஷ்கத், 7, ch, 1, pt.1) ஓவியக்காரர்களும், மனித, மிருகங்களை வரைபவர்கள் எல்லோரும் சட்டத்திற்குப் புறம்பானவர்களாக நபி சொன்னதாக உள்ளது.
*

Ettinghausen எழுதிய Introduction to Arab Painting என்ற நூலில் இஸ்லாமிய ஹாடித்களில் ஓவியக்காரர்கள் மிகுந்த அளவு கண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் நம்மையெல்லாம் உருவாக்கிய கடவுளோடு படைப்பில் போட்டியிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்நூலாசிரியர் மேலும், 'வேத நூல்களின்படி அத்தகைய ஓவியங்களுக்கு இடமே தரவில்லை'. நல்ல வேளையாக இத்தகைய பழைய இஸ்லாமியரின் வழக்கத்தை மீறி, புதிதாக மாறிய இஸ்லாமியர்கள் இந்தத் தடையை மீறியதால்தான் நமக்கு மிக அழகான பெர்ஷியன், மொகல் சின்னச் சித்திரங்கள் பலவும் கிடைத்தன.
*

கலை நுணுக்கங்கள், தத்துவங்கள், அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே அரேபியாவில் இல்லாது போயின. எப்படியோ இலக்கியப் பாடல்கள் மட்டும் சிறிதளவாவது வந்தன.
*

Byzantine and Sassaninian art - இவைகள்தவிர வேறு எந்த அரேபிய கலைகளும் வளராது போயின.
*

பெண்கள், காஃபிர்கள், நம்பிக்கையற்றவர்கள், மதத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்கள், ஆண்-பெண் அடிமைகள் நடத்தப்படும் முறைகள் பேச்சளவிலும் செயலளவிலும் மிகவும் கீழான நிலையில் இருந்தன. இதற்குக் காரணம் குரானும், இஸ்லாமிய தீர்ப்பாளர்களால் சொல்லப்பட்ட விளக்கங்களுமே காரணம்.
*

இஸ்லாமிய சட்ட திட்டங்கள் முழுமையாக மனிதனைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள்; மனிதன் பிறப்பிலிருந்து சாகும் வரை உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப் படுத்தும் சட்டங்கள்.
*

பல நேரங்களில் இஸ்லாமிய ஷாரியாவைவிடவும் இஸ்லாமியப் பழக்கங்கள் கடுமையானவை. விருத்த சேதனம் (ஆண்குறியின் முன்தோலை எடுத்தல்) குரானில் சொல்லப்படாத ஒன்று. ஆனால் தொடர்ந்து, கட்டாயமாக இது நடைபெற்று வருகிறது. இதைப் பெண்களுக்குமாக சில இஸ்லாமிய நாடுகளில் நடந்தேறுகிறது.
***



*

356. AMERICAN COLLEGE CELEBRATES CENTENARY

College celebrates centenary D. Karthikeyan


American College plans a light-and-sound show to mark celebration
— Photo: G. Moorthy

Standing tall: The main building of The American College.


MADURAI: Education is the key to unlock the golden door of freedom- George Washington Carver

Fin de siècle to the close of 19th century and start of 20th century saw the emergence of missionary education spreading across the wider parts of erstwhile Madras Presidency taking education to the unreached spaces.

One such defining moment was the establishment of The American College, in Madurai, started initially as ‘Pasumalai College’ in the year 1881 at Pasumalai.

Rev. Zumbro who had his formal education at University of Michigan, Columbia and Yale, made a proposal in the year 1903 to the Missionary bound in the United States to shift the college to Madurai.

New vision

The idea behind this shifting was to give a new vision to Christian higher education.

By this, Rev. Zumbro meant that education should be made available to the common man despite divisions based on caste, creed and religion, said Joseph Chinnaraj Jaikumar, Principal, The American College.

Rev. Zumbro envisaged that once Christian education goes public, people of Madurai would acquire a character which would be beneficial for the city in the long term.

In his words, “Madurai should grow with American College and American College should grow with Madurai.”

The century old American College main building symbolizes this slogan as it was this grandiose structure built by adopting the Indo Saracenic style rather than Gothic or Victorian that signified the arrival of modernity in Madurai.

Mr. Chinnaraj Jaikumar, said that this synthesis of Indo Aryan style also represents secularism as it possesses the minarets and arches of Islamic structure, corridors of Hindu temple and the grandness of gothic style.

Construction

The construction of the building was started in the year 1905 and was completed in 1909.

The main hall of the building was indeed a central element in the major intellectual shift that took place then in the form of public lectures to the citizens of the city.

Eminent literary scholars and international figures like Rabindranath Tagore, French Premiere Georges Clemenceau visited the college and delivered lectures in the hall.

In fact, Tagore gave public lectures in the year 1919 and collected Rs. 2,365 out of which he took Rs.2, 000 for Visva Bharati, Shantiniketan and gave Rs.365 for starting an endowment in American College.

The building was constructed by Henry Irving, who built the Mysore Palace and the then Principal G. T. Washburn was influential in getting funds from the U.S.

The building to the surprise of people of this generation was constructed at a cost of Rs.52, 000, said Mr. Chinnaraj Jaikumar.

The College will be holding a ‘light and sound’ show to mark the centenary celebration.

Mr. Chinnaraj who has done a good amount of research on Rev. Zumbro’s contribution to higher education is to come out with a book aiming to highlight his contributions to the dissemination of knowledge in this part of the world.

Citizens of Madurai owe a great deal of respect and gratitude for Rev. Zumbro who was instrumental in spreading inclusive education based on science.

Zumbropuram

Apart from his contributions in the field of education, Rev. Zumbro was a socially conscious individual who saw the resettlement of palm tree workers and the place was now remembered by his name Zumbropuram.

© Copyright 2000 - 2009 The Hindu

IndiBlogger - Network of Indian Bloggers