Thursday, September 17, 2026

என் கதை - Dr.பேரா. ஆண்டாள்

Shared with Public
என் கதை - Dr.பேரா. ஆண்டாள்


வாழ்த்துக்களுடன் இனிய காலை வணக்கம் Sir.
தங்களின் "என் கதை" நூல் வெளியீட்டு நிகழ்வு மிக அருமை.
பெருமைக்குரியது.
எல்லோரின் வாழ்வின் பல நிகழ்வுகள்,அனுபவங்கள் மலரும் நினைவுகளாக தோன்றினாலும் அதை எழுத்து வடிவில் அழகான,நகைச்சுவை உணர்வுடன் ஆர்வமாக படிக்கும் விதமாக வெளியிட உங்களைப்போன்ற உயரிய சிந்தனை கொண்ட ஒரு சிலரால் மட்டுமே சாத்தியம்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Wednesday, September 16, 2026

என் கதை - நூல் வெளியீட்டு விழா

 


1400. என் கதை - இளங்கோ கண்ணன்

ஐயா வணக்கம்; நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன்.




 220 பக்கம் முடிந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்ச்சியாகப் படிக்கும் ஒரு நூலாக அமைந்திருக்கிறது.

  தாங்கள்  மதச்சார்பற்றவர் என்பதை, வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக்  கொண்டே விளக்கி இருக்கிறீர்கள்.

 எந்த மதத்தைச் சார்ந்தவர் ஆனாலும் உயர்வு தாழ்வு காட்டாமல் நடுநிலையோடு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளீர்கள். 

பொதுவாக, இஸ்லாம்  அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒரு மார்க்கம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார்கள். அதையும்  விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.

 இந்து மதம், பின்ன கிறிஸ்தவ மதத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

  'சத் சபை' என்ற புதிய செய்தியைப் பற்றியும் சொல்லி இருக்கிறீர்கள். அந்த  அந்த அமைப்பில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சொல்லுக்கும் செயலுக்கும் எப்படி ஒருமைப்பாடு இல்லாமல் நடந்து கொண்டார் என்பதைக் குறிப்பிட்டு சாடி இருக்கிறீர்கள். உலகம் முழுவதும் இன்று பலபேர் அப்படித்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில்.

 தங்களுடைய எள்ளல் சுவை கலந்த நடைதான் மின் தொடர்வண்டி எஞ்சின் போல என்னை  விறுவிறுப்பாக இழுத்துச் செல்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.

 ஒரு சிறு திருத்தம். பக்கம் 129ல் துப்புரவுத் தொழிலாளர் என்ற இடத்தில் இடையின 'ர' வருவதற்குப் பதில் 'ற' வந்திருக்கிறது. அதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

  கடமை தவறாத மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும்  மருத்துவமனை தொடர்பான பணியாளர்கள் அனைவரையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறீர்கள். இது ஒரு பெரிய பண்பு.

அந்தப் பண்புக்குத் தலை வணங்குகிறேன்.

Saturday, September 12, 2026

1399. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு:

‘சமூக நீதி’ என்ற பெயரில்
திரிந்து போன பால்!

ஆனந்த் டெல்டும்டெ 

தமிழாக்கம்: தருமி








மக்களுடைய எண்ணிக்கை கணிசமாகத் தெரிய வந்தால், அதை வைத்து மக்கள் தங்களுடைய நியாயமான உரிமைகளைக் கோரிப் பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று பலரும் ஒரு கற்பனையில் மிதக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு சுதந்திரத்தையும் துணிச்சலையும் கொடுக்கும் என்றும் கருதுகிறார்கள். 

இது, சில முக்கிய உண்மைகளைத் தவிர்த்து விட்டுப் பார்ப்பது போலத் தெரிகிறது. ஏனெனில், சாதிக் கணக்கெடுப்பு நடப்பதால் மட்டுமே - மக்களுக்குச் சரியான விகிதாச்சாரத்தோடு - அனைத்திலும் பங்கு கிடைக்கும் என்று நினைப்பதே தவறு. 

அதையும் கடந்து, பல்வேறு ஆதிக்கச் சக்திகளின் அதிகாரங்களையும் வசதிகளையும் கேள்வி கேட்கும் நிலை வர வேண்டும். சாதியக் கணக்கெடுப்பின் மூலம் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் சம பங்கு கேட்கும் நிலை இயல்பிலேயே வர வேண்டும். இதிலிருந்து தெரியும் ஒரு செய்தி, தரவுகள் மட்டுமே போதாது; அவை வெறும் ஆயுதங்கள் மட்டுமே.

சாதிப் பட்டியலை வைத்துக் கொண்டு, அந்தப் படிநிலைகளை உடைக்காமல், ஆட்சியமைக்கும் முயற்சி மட்டும் இருப்பதால் எந்தப் பயனுமில்லை. சாதிகளை மக்களின் புற அடையாளங்களாகவும், மக்களின் சமூக எல்லைகளை வரைமுறைப்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்தக் கூடாது.

முழு கட்டுரையை வாசிக்க:

https://dalitmurasu.com/posts/6aa3e4467854facd07144db8

முகநூல் இணைப்பு:

https://www.facebook.com/share/p/1EoUYAuajE/

1398. என் கதை - Dr. அழகேசன், தமிழ்ப் பேராசிரியர்




சாம்ஜி சாரிடம் பழகிய போது அவரது வெளிப்படையான செயலும், சுருக்கென்று தைக்கும் பேச்சும் என்னை ஈர்த்தன. Future ல் இப்படி shock தரும் அவரது எழுத்தும், உழைப்பும் விஸ்வரூபமெடுக்கும் என்று ....... அன்று நினைக்கவே இல்லை. ஆல்வின்

டோப்ளர் அன்று அறுதியிட்டது 'என்கதை' நூலுக்கும் ...
அப்படியே பொருந்தும். 

நீண்ட. ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் உவேசாவின் என் சரித்திரம் என்னும் படைப்பை இருமுறை கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வியந்தேன்.அந்த வரிசையில் 'என்கதை'யை மும்முறை முற்றுகையிட்டேன்.படிக்கப் படிக்க, படித்தேன் என பிடித்தது.
ஒரே. ஒரு ஆய்வும் பாராட்டும்.......

திருக்குறளுக்கு மட்டுமே நூல் எழுதிய காலத்தில் ஒருappreciation அமைந்தது போலவே தங்களின் நூலுக்கும் பொலிந்தது போற்றுதலுக்குரியது.

நன்கு பிரித்து மேய்ந்த தருமி, ஒரு நல்ல மேய்ப்பர்.
தன்னையே அடையாளங் காணும் படைப்பாளன் தரணியில் தாழ்வதில்லை.ஏன் என்றால் தருமியைப் போன்றவர்கள் வாரிசுகளால் வார்க்கப்படுவதில்லை.
வாசிப்பவர்களால் பூசிக்கப்படுபவர்கள்.. வாழ்க.


நினைவுகளுடன்
தங்கள்.
ஆர்.கே.அழகேசன்

****

ப்ளாகர் காலத்தில் ஒவ்வொரு பதிவிற்குப் பின்னும் பல மிக நல்ல  பின்னூட்டங்கள் வருவதுவே வழக்கம். அந்த வழக்கம் இப்போது இல்லாமல் வெறும் ஸ்மைலிகளில் காலம் கரைகின்றது.

பழைய நினைப்புடா பேராண்டி என்ற நினைப்பில் உங்கள் கருத்துகளை இங்கே கீழே comments எழுத அழைக்கின்றேன். வாருங்கள் ...